Published : 23 Jan 2020 05:39 PM
Last Updated : 23 Jan 2020 05:39 PM

நியூஸி.யை ஆஸி. வீழ்த்தியது, ஆஸி.யை நாம் வீழ்த்தினோம் என்ற பார்முலாவெல்லாம் எடுபடாது: விராட் கோலி 

நியூஸிலாந்து அணி மற்றெல்லா அணிகளைப் போலவும் தங்கள் நாட்டில் ஆடும்போது வலுவானவர்கள், எனவே இந்திய அணியும் சிறப்பாக ஆடினால்தான் வெற்றி பெற முடியும் என்பதை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வலியுறுத்தினார்.

வெள்ளிக்கிழமையான நாளை ஆக்லாந்தில் முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 12.20 மணிக்குத் தொடங்குகிறது.

இந்நிலையில் நியூஸிலாந்து அணி பற்றி விராட் கோலி கூறியதாவது:

அவர்கள் நாட்டில் அவர்கள் வலுவானவர்கள், எனவே நாங்கள் எதையும் உத்தரவாதமாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை. களத்தின் கோணங்களை அவர்கள் நன்கு அறிவார்கள், பிட்ச்களை நன்கு அறிவார்கள் எனவே உள்நாட்டுச் சாதகம் அவர்களுக்குத்தான் உள்ளது. இதைக் கூறினாலும் நாமும் இங்கு அதிகம் விளையாடியுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நியூஸி.யை ஆஸி.வீழ்த்தியது, ஆஸி.யை நாம் வீழ்த்தியுள்ளோம் என்பதெல்லாம் இங்கு எடுபடாது. சர்வதேச மட்டத்தில் ஒவ்வொரு தொடரையும் சிறப்பாக ஆடினால்தான் வெற்றி பெற முடியும்.

நியூஸிலாந்தை நியூஸிலாந்தில் வீழ்த்தும் சவால் நம் முன் உள்ளது அதற்கு நாங்கள் முழுதும் தயாராக இருக்கிறோம், என்றார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x