Published : 22 Jan 2020 04:18 PM
Last Updated : 22 Jan 2020 04:18 PM

ரஞ்சி ட்ராபி கிரிக்கெட்: விருத்திமான் சஹாவுக்கு ‘வேண்டாம்’ என்று அறிவுறுத்திய பிசிசிஐ

கொல்கத்தாவில் வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் விரலில் காயமடைந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்து வரும் இந்திய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா ரஞ்சி போட்டியில் ஆட வேண்டாம் என்று பிசிசிஐ அறிவுறுத்தியதாக பெங்கால் கிரிக்கெட் அணிப் பயிற்சியாளர் அருண்லால் தெரிவித்துள்ளார்.

விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை நடந்தது, இதனையடுத்து அவர் சிகிச்சைப் பெற்று தற்போது தன் உடற்தகுதியை நிரூபிப்பதற்காக டெல்லிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் ஆட விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆனால் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் கொண்ட தொடருக்கு அவர் தயாராக வேண்டும் என்று பிசிசிஐ ரஞ்சியில் ஆட வேண்டாம் என்று கூறியதாக அருண்லால் உறுதி செய்தார்.

ஹைதராபாத்துக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 303 ரன்கள் வித்தியாச வெற்றி பெற்ற பெங்கால் அணி நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

பும்ராவுக்கு முன்னுரிமை அளித்தது போலவே தற்போது சஹாவுக்கும் ரஞ்சி போட்டியைத் துறக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. உடற்தகுதியை நிரூபிக்க ரஞ்சி கிரிக்கெட்டில் ஆட வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x