

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா, உக்ரைனின் நாடியா கிச்செனோக் ஜோடி இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவு அரை இறுதி சுற்றில் சானியா மிர்சா, நாடியா கிச்செனோக் ஜோடியானது ஸ்லோவேனியாவின் தமரா ஜிடன்செக், செக் குடியரசின் மேரி பவுஸ்கோவா ஜோடியை எதிர்த்து விளையாடியது.
ஒரு மணி நேரம் 24 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சானியா, நாடியா ஜோடி 7-6, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. இன்று நடைபெறும் இறுதி சுற்றில் சீனாவின் ஷுவாய் பெங், ஷுவாய் ஜாங் ஜோடியை எதிர்கொள்கிறது சானியா, நாடியா ஜோடி.