Last Updated : 16 Jan, 2020 05:55 PM

 

Published : 16 Jan 2020 05:55 PM
Last Updated : 16 Jan 2020 05:55 PM

குறைந்தது 3 டி20 போட்டிகளிலாவது ஆடியிருக்க வேண்டும்: தோனியிடம் கூறிவிட்டோம்- பிசிசிஐ வட்டாரம் தகவல்

பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பாகவே தோனியிடம் இது குறித்து முன் கூட்டியே தகவல் தெரிவித்து விட்டதாக பிசிசிஐ-யைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

பெயரை வெளியிடாத அந்த நிர்வாகி ஏ.என்.ஐ.யிடம் கூறியதாவது:

தோனிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட மாட்டாது என்பது ஏற்கெனவே தோனிக்குத் தெரிவிக்கப்பட்டது. குறைந்தது 3 டி20 போட்டிகளிலாவது அவர் ஆடியிருந்தால் ஒப்பந்தத்திற்குப் பரிசீலிக்கப்பட்டிருப்பார், ஆனால் அவர் ஆடவில்லை.

கடந்த 6 மாதங்களில் ஒரு போட்டியில் கூட தோனி ஆடவில்லை. ஒரு குறிப்பிட்ட சீசனில் குறைந்தது 3 டி20 போட்டிகளிலாவது ஆடியிருக்க வேண்டும் என்பது தகுதிக்கான அடிப்படை அளவுகோல், என்றார் அவர்.

தோனி மட்டுமல்லாது தினேஷ் கார்த்திக், அம்பதி ராயுடு, இளம் இடது கை வீச்சாளர் கலீல் அகமெட் ஆகியோருக்கும் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை, ஆனால் இவை பற்றி யாரும் எதுவும் கேள்வி எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி ஆடவில்லை எனும்போது அனுபவசாலியான தினேஷ் கார்த்திக்கைப் பயன்படுத்தியிருக்கலாம், ஆனால் ஏனோ தினேஷ் கார்த்திக் ஓரம் கட்டுப்பட்டு விட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x