Published : 19 Dec 2019 08:56 AM
Last Updated : 19 Dec 2019 08:56 AM

நாங்கள் டாஸை நம்பியிருக்கும் அணியல்ல  : விராட் கோலி

விசாகப்பட்டிணம் ஒருநாள் போட்டியில் ராகுல், ரோஹித்தின் வெறியாட்டச் சதங்கள், அய்யர், ரிஷப் பந்த் 4 ஒவர் 73 ரன் கூட்டணி, குல்தீப் யாதவ் ஹாட்ரிக், ஷமியின் முக்கியமான ஒரே ஓவர் 2 விக்கெட் ஆகியவற்றினால் மே.இ.தீவுகள் நொறுங்கியது.

ஆனால் இந்தியாவின் 387/5-ல் கேப்டன் விராட் கோலி டக் அவுட் ஆனது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து விராட் கோலி கூறியதாவது:

கடந்த 3 போட்டிகளில் நடந்த நல்லது என்னவெனில் முதலில் பேட் செய்து நன்றாக ஆடினோம் என்பதே. 2வதாக பேட் செய்வது பிரச்சனையல்ல. விரட்டலில் நாம் சிறந்த அணிகளுள் ஒன்று, மிகச்சிறந்த அணியாக இல்லாவிட்டாலும்.

எப்போதும் 40-50 ரன்கள் கூடுதலாக எடுப்பது நல்லதே. ரோஹித், ராகுல் கூட்டணி தனித்துவம் அதன் பிறகு அய்யர், ரிஷப் பந்த் ஆட்டம் பிரமாதம். இப்போதைக்கு பெரிய 50 ஓவர் கிரிக்கெட் தொடர்கள் எதுவும் இல்லாததால் இப்போதைக்கு ஒருநாள் கிரிக்கெட்டுகளில் அச்சமற்ற முறையில் ஆட வேண்டியதுதான்.

டாஸ் தோற்ற பிறகு முதலில் பேட் செய்த விதம் கேப்டனாக மகிழ்ச்சி அளித்தது. இது நாம் டாஸை நம்பியிருக்கவில்லை என்பதை காட்டுகிறது. முதலில் பேட் செய்வதிலேயே எதிரணியினரை போட்டியிலிருந்து விலக்க வேண்டும், அதைச் செய்தோம். கேட்ச்களை விடக்கூடாது. மகிழ்ச்சியாக ஆடினால் பீல்டிங்கும் கைகூடும்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x