Published : 06 Dec 2019 10:17 AM
Last Updated : 06 Dec 2019 10:17 AM
டி20 உலகக்கோப்பை குறித்து தனக்கு சில யோசனைகள் இருப்பதாகவும் அதனை விரைவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருடன் விவாதிக்க இருப்பதாகவும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
கங்குலி இது தொடர்பாக கூறியதாவது:
நாம் டி20 சர்வதேச போட்டிகளில் இலக்கை விரட்டும் போது நன்றாகவே செயல்படுகிறோம். அதே போல் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய தீர்மானிக்கும் போதும் இதே போல் ஆட வேண்டும்.
என்னிடம் சில யோசனைகள் உள்ளன, இதனை நான் ரவிசாஸ்திரி, விராட் கோலி மற்றும் அணி நிர்வாகத்திடம் நிச்சயம் பகிர்ந்து கொள்வேன்.
நாம் அதிகமாக டி20 சர்வதேச போட்டிகளில் ஆடுவதில்லை, ஆனால் இப்போது ஆடிவருவதால் 2020 உலகக்கோப்பை டி20-க்குள் நிச்சயம் அணி முழுதும் தயாராகி விடும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT