Published : 05 Dec 2019 10:45 AM
Last Updated : 05 Dec 2019 10:45 AM

தெற்காசிய விளையாட்டு போட்டி: இந்தியா தொடர்ந்து பதக்க வேட்டை - 32 தங்கத்துடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற்றம்

நேபாளத்தில் நடைபெற்று வரும் 13வது தெற்காசிய விளையாட்டில் கோ-கோவில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியினர்.

காத்மாண்டு

13-வது தெற்காசிய விளையாட்டு நேபாளத்தில் நடைபெற்று வரு கிறது. இதன் 3-வது நாளான நேற்றும் இந்திய வீரர், வீராங் கனைகள் பதக்கங்களை வென்று குவித்தனர்.

ஆடவருக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் கிரிபால் சிங் 57.99 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை நிகழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான ககன்தீப் சிங் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். மகளிர் பிரி வில் இந்தியாவின் நவ்ஜீத் கவுர் தங்கப் பதக்கத்தையும், சுரபி பிஸ்வாஸ் வெள்ளிப் பதக்கத் தையும் வென்றனர்.

ஆடவருக்கான நீளம் தாண்டு தலில் இந்தியாவின் லோகேஷ் சத் யன் தங்கமும், சுவாமிநாதன் ராவ் வெள்ளியும் வென்றனர். மகளிருக் கான நீளம் தாண்டுதலில் இலங் கையைச் சேர்ந்த லக்சினி சாரங் (6.38 மீட்டர்) தங்கப் பதக்கமும், அன்ஜனி உத்தபலா (6.11) வெள்ளிப் பதக்கமும், இந்தியாவின் சந்திரா பாபு (6.02) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் அர்ச்சனா சுசீந்திரன் பந்தய தூரத்தை 23.66 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். பாகிஸ்தானின் நஜ்மா பர்வீன் (23.69) வெள்ளிப் பதக்கமும், இந்தியாவின் சந்திரலேகா (24.27) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் சுரேஷ் குமார் பந்தய தூரத்தை 29.33.61 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இதே பிரிவில் இலங்கையின் சண்முகேஷ்வரன் (30.49.30) வெள்ளிப் பதக்கமும், நேபாளத்தின் தீபக் (30.50.06) வெண் கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

கலப்பு தொடர் ஓட்டத்தில் பிரக் னியா மோன், விஷ்வர்ஜித் சாய் கோம், சரோஜினி தேவி, எம்.எம். ஆதர்ஷ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 1:35:20 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றது. நேபாள அணி (1:38:28) வெள்ளிப் பதக்கமும், இலங்கை அணி (1:41:21) வெண் கலப் பதக்கமும் கைப்பற்றின.

டேபிள் டென்னிஸ்

டேபிள் டென்னிஸ் ஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றது. ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஹர்மித் தேசாய், அந்தோனி அமல்ராஜ் ஜோடி 8-11, 11-7, 11-7, 11-5, 8-11, 12-10 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த சுனில் ஷெட்டி, சுதான்ஸு குரோவர் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.

மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் மதுரிகா பட்கர், ஜா அகுலா ஜோடி 2-11, 11-8, 11-8, 11-6, 5-11, 11-5 என்ற செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த சுதிர்தா முகர்ஜி, அஹிகா முகர்ஜி ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், சுதிர்தா முகர்ஜி ஜோடி 11-6, 9-11, 11-6, 11-6, 11-8 என்ற செட் கணக்கில் சகநாட்டின் அமல் ராஜ், அஹிகா முகர்ஜி ஜோடியை தோற்கடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றியது.

கோ-கோ

கோ-கோ போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது. ஆடவர் இறுதிப் போட்டியில் இந்திய அணி 16-9 என்ற கணக்கில் வங்கதேசத்தையும் மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய அணி 17-5 என்ற கணக்கில் நேபாளத்தையும் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

தேக்வாண்டோ

தேக்வாண்டோவில் இந்தியா 3 தங்கம் உட்பட 6 பதக்கங்களை கைப்பற்றியது. 53 கிலோ எடைப் பிரிவில் லதிகா பண்டாரி, 74 கிலோ எடைப் பிரிவில் ஜர்னல் சிங், 73+ கிலோ எடைப் பிரிவில் ருடாலி பருவா ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

63 கிலோ எடைப் பிரிவில் சவுரவ், 52 கிலோ எடைப் பிரிவில் கங்ஜோத் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், 86 கிலோ எடைப் பிரிவில் சைதன்யா வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

பதக்க பட்டியல்..

3-வது நாளின் முடிவில் இந்தியா 32 தங்கம், 26 வெள்ளி, 13 வெண்கலம் என 71 பதக்கங்களை வென்று பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. நேபாளம் 29 தங்கம், 15 வெள்ளி, 25 வெண்லகம் என 69 பதக்கங்களுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x