Last Updated : 03 Dec, 2019 04:41 PM

 

Published : 03 Dec 2019 04:41 PM
Last Updated : 03 Dec 2019 04:41 PM

டெல்லி கேபிடல்ஸ் ரஜினிகாந்திடம் பயிற்சியைத் தொடங்கினார் ஜஸ்பிரித் பும்ரா

காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சுப்பயிற்சியாளர் ரஜினிகாந்த் சிவஞானத்திடம், இன்று முதல் பயிற்சியைத் தொடங்கினார்.

மும்பை கிரிக்கெட் அமைப்பின் மைதானத்தில் பும்ராவுக்கு முறையான பயிற்சியை ரஜினிகாந்த் தொடங்கினார்.

கடந்த செப்படம்பர் மாதம் பும்ராவுக்கு பந்துவீசும் போது முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் அணிகளுக்கு எதிரான தொடரில் பும்ரா விளையாடவில்லை. மேலும், வரும் மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலும் பும்ரா தேர்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில் தற்போது முதுகுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தில் இருந்து பும்ரா மீண்டுள்ளதால், அதற்கான முறையான பயிற்சியை இன்று முதல் தொடங்கியுள்ளார். மும்பை கிரிக்கெட் அமைப்புக்குச் சொந்தமான மைதானத்தில் ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் ரஜினிகாந்த் சிவஞானத்திடம் பும்ரா பயிறச்சியைத் தொடங்கியுள்ளார்.

ரஜினிகாந்த் சிவஞானம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்தாலும், வீரர்களுக்குத் தனிப்பட்ட முறையில் தேவைக்கு ஏற்ப பயிற்சியை வழங்கி வருகிறார்.

ரஜினிகாந்த் சிவஞானத்திடம் பயிற்சி பெறுவது தொடர்பாக வீடியோவையும் பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தீவிரமான பயிற்சியைத் தொடங்கியுள்ள ஜஸ்பிரித் பும்ரா ஜனவரி மாதம் நியூஸிலாந்து பயணத்தின்போது இந்திய அணியில் இடம் பெறுவார் எனத் தெரிகிறது

இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பதவிக்கு ரஜினிகாந்த் விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக நியூஸிலாந்தின் நிக் வெப்பை பிசிசிஐ தேர்வுக்குழுவினர் தேர்வு செய்தனர். இதனால், ஐபிஎல் அணிக்கு சிவஞானம் பயிற்சி அளித்து வருகிறார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x