Published : 03 Dec 2019 10:33 AM
Last Updated : 03 Dec 2019 10:33 AM

ரன்களை விட்டுக்கொடுக்காமல் 6 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார் அஞ்சலி

தெற்காசிய விளையாட்டு போட்டியில் மகளிர் கிரிக்கெட்டில் மாலத் தீவு அணிக்கு எதிரான ஆட்டத்தில் நேபாள வீராங்கனையான அஞ்சலி சந்த், ரன்கள் எதையும் விட்டுக் கொடுக்காமல் 6 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை படைத்தார்.

நேபாளத்தில் உள்ள போக்ரா வில் தெற்காசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான டி 20 ஆட்டத்தில் நேற்று மாலத்தீவு - நேபாளம் மோதின. முதலில் பேட் செய்த மாலத்தீவு 11 ஓவர்களில் 16 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

மித வேகப்பந்து வீச்சாளரான அஞ்சலி சந்த் 2.1 ஓவர்களை வீசி ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமல் 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதற்கு முன்னர் 2019-ம் ஆண்டு சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் மாலத்தீவு வீராங்கனையான மாஸ் எலிசா 3 ரன்களுக்கு 6 விக் கெட்களை வீழ்த்தியதே மகளிர் டி 20 கிரிக்கெட்டில் சாதனையாக இருந்தது.

இதனை தற்போது முறி யடித்து புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார் அஞ்சலி சந்த். தொடர்ந்து விளையாடிய நேபாளம் 0.5 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x