Published : 28 Nov 2019 12:43 PM
Last Updated : 28 Nov 2019 12:43 PM

2-வது சுற்றில் ஸ்ரீகாந்த்

சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

லக்னோவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தனது முதல் சுற்றில் ரஷ்யாவின் விளாடிமிர் மல்கோவை எதிர்த்து விளையாடினார்.

இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-12, 21-11 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். 2-வது சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த பாருபள்ளி காஷ்யப்புடன் மோதுகிறார் ஸ்ரீகாந்த்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x