Last Updated : 11 Aug, 2015 11:11 AM

 

Published : 11 Aug 2015 11:11 AM
Last Updated : 11 Aug 2015 11:11 AM

ஐசிசி தரவரிசை: 3-வது இடத்துக்கு முன்னேறுமா இந்தியா?

இந்தியா-இலங்கை அணிகள் இடை யிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் காலேவில் நாளை தொடங்குகிறது.

இந்தத் தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெறும்பட்சத்தில் சர்வதேச தரவரிசையில் 3-வது இடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

ஆஷஸ் தொடரின் கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தைத் தோற்கடிக்கும் பட்சத்தில் இந்தியா 2-1 என்ற கணக்கில் இலங்கையை வென்றாலே தரவரிசையில் 3-வது இடத்தைப் பிடித்துவிடலாம். தற்போதைய நிலையில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

ஒருவேளை இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் இந்தியாவைத் தோற்கடிக்கும்பட்சத்தில் அந்த அணி மேலும் 8 புள்ளிகளைப் பெற்று தரவரிசையில் 5-வது இடத்துக்கு முன்னேறலாம். அதேநேரத்தில் இந்திய அணி 8 புள்ளிகளை இழந்து தரவரிசை யில் 6-வது இடத்துக்கு தள்ளப்படும். இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் வென்றாலும், தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்குத் தள்ள வாய்ப்பு உள்ளது.

கடைசியாக 2010-ல் இந்திய அணி, இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது தொடர். அதே போன்று இந்தத் தொடர் சமனில் முடிந்தால் இலங்கை அணிக்கு ஒரு புள்ளி கிடைக்கும். இந்திய அணி தொடர்ந்து 97 புள்ளி களுடனேயே இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x