Published : 17 Nov 2019 04:44 PM
Last Updated : 17 Nov 2019 04:44 PM

தொடர்ந்து 4 சிக்சர்கள், சையத் முஷ்டாக் அலி ட்ராபியில் சரவெடி அரைசதம்: மேகாலயா வீரர் சாதனை

மும்பையில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி ட்ராபி டி20 கிரிக்கெட் போட்டியில் மிஜோரம் அணிக்கு எதிராக 14 பந்துகளில் அரைசதம் கண்டு மேகாலயா வீரர் அபய் நேகி சாதனை புரிந்தார், இதன் மூலம் அதிவேக சையத் முஷ்டாக் அலி டி20 அரைசத சாதனையை வைத்திருந்த ராபின் உத்தப்பாவை முறியடித்தார் அபய் நேகி.

மேகாலயா அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் என்ற நிலையில் இருந்த போது அபய் நேகி இறங்கினார். இறங்கிய ஜோருக்கு 6 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என்று 14 பந்துகளில் அரைசதம் விளாசினார். சாதனையை எட்ட 4 தொடர்ச்சியான சிக்சர்களை அடித்தார்.

இவரது இன்னிங்சினால் மேகாலயா அணி 20 ஓவர்களில் 207/4 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.

உத்தராகண்டில் பிறந்த அபய் நேகிக்கு வயது 27. இவர் மேகாலயா, திரிபுரா அணிகளுக்கு ஆடிஉள்ளார். ஷில்லாங் அணிக்கு எதிராக முதல் தர கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு அறிமுகமானார். ஜனவரி 2018-ல் ராஞ்சியில் பெங்கால் அணிக்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகமானார்.

இந்த சையத் முஷ்டாக் அலி ட்ராபியில் ஏற்கெனவே வலுவான மும்பைக்கு மேகாலயா அணி அதிர்ச்சியளித்தது நினைவிருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x