Published : 07 Nov 2019 03:30 PM
Last Updated : 07 Nov 2019 03:30 PM
ஜொஹான்னஸ்பர்க், ஐ.ஏ.என்.எஸ்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தற்போது படுமோசமான ஸ்திதியில் இருந்து வருவதாக முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் வேதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே உலகக்கோப்பையில் மோசமாக ஆடிய நிலையில் சமீப இந்தியத் தொடரில் தோற்று வெந்த புண்ணில் உப்பைத் தேய்த்தனர்.
இவை போதாதென்று தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்திற்கும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் அமைப்புக்கும் மோதல் ஏற்பட்டு மூத்த அதிகாரிகள் 3 பேர் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
“இங்குள்ள நிலைமைகளை சிலர் இனிப்புத் தடவி கொடுக்கின்றனர். ஆனால் உண்மை நிலவரம் என்னவெனில் மிக மோசமான ஸ்திதியில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் உள்ளது. சில மூளையுள்ள நபர்கள் இந்த நிலைமையைச் சரி செய்வார்கள் என்று நம்புவோம்.
எம்.எஸ்.எல். லீக் தொடர் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நல்ல ஆதரவு பெறும் , ஆனால் இந்த தொடருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக் கூடாது
நம் கிரிக்கெட்டைப் பற்றிப் படிக்க, பார்க்க, நம் கிரிக்கெட்டை கவனிக்க மிகவும் வருத்தமாக உள்ளது, நிறைய எதிர்மறைகள் இருக்கின்றன.” என்று மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT