Published : 06 Nov 2019 02:50 PM
Last Updated : 06 Nov 2019 02:50 PM
ஐபிஎல் 2020ற்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் டிசம்பர் மாதம் 19ம் தேதி நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாக கவுன்சில் அறிவித்துள்ளது.
பொதுவாக ஏப்ரல்-மே மாத விடுமுறைக் காலங்களில் பணமழை ரன் மழை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும், இம்முறை கொல்கத்தாவில் முதல் முறையாக இதற்கான வீரர்கள் ஏலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரை பெங்களூருவில் நடைபெற்று வந்தது, பிசிசிஐ புதிய தலைவர் கங்குலி என்பதால் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2020க்காக ஒவ்வொரு அணிக்கும் ரூ.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏலத்தில் மீதமுள்ள தொகையுடன் கூடுதலாக ரூ.3 கோடி ஒவ்வொரு அணி உரிமையாளர்களின் இருப்பில் இருக்கும்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம்தான் ரூ.8.2 கோடி என்று அதிகபட்ச தொகை கையிருப்பில் உள்ளது. அடுத்த இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.7.15 கோடி வைத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ரூ.6.05 கோடி உள்ளது. மும்பை இன்தியன்ஸ் அணியிடம் 3.55 கோடி கையிருப்பு உள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூ.3.2 கோடி உள்ளது. ஆர்சிபி அணியிடம் ரூ.1.80 கோடியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாதிடம் ரூ.5.30 கோடியும் கைவசம் உள்ளது.
இந்த ஆண்டு நடைபெறும் ஏலம்தான் ஏற்கெனவே இருக்கும் வீரர்களுக்கான கடைசி ஏலம், 2021 மெகா ஏலத்தில் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு புதிதாக ஏலத்தில் வீரர்களைத் தேர்வு செய்யும்.
எனவே 2021-ல் அனைத்து ஐபிஎல் அணிகளின் தோற்றமே மாறிவிடும் என்று தெரிகிறது.
-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT