Published : 05 Nov 2019 07:24 PM
Last Updated : 05 Nov 2019 07:24 PM
புதுடெல்லி, பிடிஐ
எம்.எஸ். தோனியுடன் ரிஷப் பந்த்தை ஒப்பிட்டு அவரை காலி செய்ய வேண்டாம் என்ற தொனியிலும் ரிஷப் பந்த் தன்னிலே சிறந்தவராக வர வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய முன்னாள் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான டெல்லி டி20 போட்டியில் பந்த் பேட்டிங் மற்றும் டி.ஆர்.எஸ். குளறுபடிகள் விமர்சனத்துக்கு ஆளாகின, டிஆர்எஸ் முடிவை எடுப்பதில் தோனி சிறந்து விளங்குபவர்.
ஆடம் கில்கிறிஸ்ட் இந்நிலையில் இந்தியாவில் நிகழ்ச்சி ஒன்றிற்காக வந்திருந்த போது கூறியதாவது:
இந்திய பத்திரிகையாளர்கள், இந்திய ரசிகர்களுக்கு என் முதற்கண் ஆலோசனை: முதலில் தோனியுடன் பந்த்தை ஒப்பிட்டு காலி செய்யாதீர்கள். எந்த மாவை வார்ப்பில் பயன்படுத்தி தோனி என்பவர் உருவாக்கப்பட்டாரோ அந்த மாவை பிசைந்து விட்டனர். ஏனெனில் இன்னொரு தோனியை உருவாக்க முடியாது என்பது தெரிந்ததே.
என் சொந்த அனுபவத்திலிருந்து கூறுகிறேன், ஆஸ்திரேலியாவின் ஆகச்சிறந்த கிரிக்கெட் அணியில் இயன் ஹீலி தேர்வு செய்யப்பட்ட போது நானும் இயன் ஹீலி வார்ப்பில் உருவாக வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் நான் ஆடம் கில்கிறிஸ்டாக இருந்து கொண்டே அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்பினேன். இதைத்தான் நான் ரிஷப் பந்த்திற்கும் கூறுவேன்.
என்னுடைய அறிவுரை என்னவெனில் என்னவெல்லாம் கற்றுக் கொள்ள முடியுமோ அவற்றைக் கற்றுக் கொள், கடினமாக உழை, ஆனால் தோனியாக முயற்சிக்காதே. சிறந்த ரிஷப் பந்த்தாக இருக்க முயற்சி செய், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT