Published : 22 Oct 2019 03:00 PM
Last Updated : 22 Oct 2019 03:00 PM

‘பிட்சாவது ஒண்ணாவது’: வெற்றிக்குப் பிறகு ரவி சாஸ்திரி 

ராஞ்சி பிட்ச் தொடக்கத்தில் கடினமாக இருந்தது, ஆனால் ரோஹித் சர்மா பிரமாதமாக அதற்குத் தக்கவாறு தன் பேட்டிங்கை அமைத்துக் கொண்டதாகக் கூறிய ரவிசாஸ்திரி, தங்களது தாரக மந்திரம் பிட்சாவது ஒண்ணாவது என்பதே என்றார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அவர் சஞ்சய் மஞ்சுரேக்கர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போது, “ரோஹித் சர்மா தொடக்க வீரராக தன்னை வேறொரு மட்டத்துக்கான வீரர் என்பது அவருக்குள்ளே இருப்பதாக நிரூபித்துள்ளார். தொடக்க வீரராக எதிர்கொள்ளும் சவால்களுக்கு அவர் தன்னை நன்றாகவே தயார் படுத்திக் கொண்டுள்ளார்.

அஜிங்கிய ரஹானே மிடில் ஆர்டரில் இருக்கிறார், அவர் தன்னை மறுகண்டிபிடிப்புச் செய்து கொள்ள வேண்டும் அதை அவரே செய்து விட்டார். ரோஹித் சர்மா வேறொரு கிளாஸைச் சேர்ந்தவர், தொடக்க வீரராக அவருக்கு வித்தியாசமான மனநிலை தேவை. அவர் அதன் சவால்களுக்குத் தயாராகி விட்டார்.

கடினமான சூழ்நிலையைக் கண்டு அஞ்சாத ஒரு மனநிலைக்கு ரோஹித் தயாராகி விட்டார். இந்தத் தொடரில் அவர் செய்தது அபாரமான ஒன்று.

எங்கள் தத்துவம் என்னவெனில் ‘பிட்சாவது ஒண்ணாவது’ என்பதே. ஆக்லாந்து, மெல்போர்ன், மும்பை எங்கு நடந்தாலும் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதே. 20 விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்து விட்டால் நம் பேட்டிங் ஒரு முறை நன்றாகத் தொடங்கி விட்டால் பிறகு பிரமாதமாக ஓடும் பெராரி போல்தான்.

ஷாபாஸ் நதீம் வீசியது பற்றிக் கூற வேண்டுமெனில் அவர் முதல் விக்கெட்டை எடுத்த போது நான் கூறினேன், பிஷன் சிங் பேடி அவர் பவுலிங்கை பார்த்திருந்தால் கொண்டாடியிருப்பார் என்று கூறினேன். வெளியிலிருந்து பார்க்கும் போது கிளாஸிக்கல் ஸ்பின்னர் விக்கெட்டாகும் அது” இவ்வாறு கூறினார் ரவி சாஸ்திரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x