

ராஞ்சி
71 ஆண்டுகளுக்குப் பின் கிரிக்கெட்டின் பிதாமகர் டான் பிராட் மேனின் சாதனையை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.
ராஞ்சியில் நடந்துவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்ததன் மூலம் இந்த புதிய வரலாற்றை படைத்துள்ளார்.
டெஸ்ட் தொடருக்கு லாயக்கற்றவர், தேறமாட்டார், சிவப்பு நிறப் பந்தில் ஆடுவதற்கு பொறுமை போதாது என்றெல்லாம் ரோஹித் சர்மா விமர்சிக்கப்பட்ட நிலையில், அத்தனை விமர்சனங்களுக்கும் இந்த டெஸ்ட் தொடரில் அவர் பதில் அளித்துள்ளார்.
ராஞ்சியில் நடந்துவரும் 3-வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா முதல் முறையாக இரட்டை சதம் அடித்து 212 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டியில் 3 இரட்டை சதங்கள் அடித்து டெஸ்ட் போட்டியில் முதல் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.
அதுமட்டுமல்லாமல் இந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா 176,127,14,212 ரன்கள் என 529 ரன்கள் சேர்த்து சாதனையாளர் பட்டியலில் இணைந்தார்.