Published : 19 Oct 2019 08:28 PM
Last Updated : 19 Oct 2019 08:28 PM
பிசிசிஐ-யின் தலைவராக சவுரவ் கங்குலி நியமிக்கப்படவுள்ளதையடுத்து முன்னாள் இந்நாள் வீரர்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கங்குலியினால் அணிக்குள் கொண்டு வரப்பட்டு அவரால் ஊக்குவிக்கப்பட்ட வீரர்களுள் ஒருவரான யுவராஜ் சிங் கங்குலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தன் ட்விட்டர் பக்கத்தில் யுவராஜ் சிங் கூறும்போது, “மகா மனிதருக்கான மகத்துவமான பயணம். இந்திய கேப்டனிலிருந்து பிசிசிஐ தலைவர். கிரிக்கெட் வீரரைத் தலைவராகத் தேர்வு செய்வது பிரமாதமான ஒரு முடிவு. வீரர்கள் பார்வையிலிருந்து கிரிக்கெட் நிர்வாகத்தைப் பார்க்க ஓர் வாய்ப்பு. யோயோ சோதனைக்கு கிராக்கி அதிகரித்திருக்கும் சமயத்தில் நீங்கள் தலைவராக வேண்டும் என்பதை விரும்பினேன், குட்லக் தாதா” என்று ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு கங்குலியின் பதில், “மிக்க நன்றி, நீங்கள் இந்தியாவுக்காக 2 உலகக்கோப்பைகளை வென்று கொடுத்தீர்கள். இப்போது கிரிக்கெட்டுக்காக நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டிய நேரம். நீங்கள் என் சூப்பர் ஸ்டார், கடவுள் ஆசீர்வாதம் எப்போதும்” என்று பதிவிட்டுள்ளார்.
தலைவர் பதவிக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பிறகு கங்குலி, ‘கிரிக்கெட்டில் இயல்பான நடைமுறையைக் கொண்டு வருவேன்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT