Published : 18 Oct 2019 10:52 AM
Last Updated : 18 Oct 2019 10:52 AM
ஓடென்ஸ்
டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வர்மா ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறினர்.
டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் இப்போட்டிகள் நடை பெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் கொரியாவின் ஆன் சே யங் 21-14, 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் சிந்துவை வீழ்த்தினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் சீனாவின் சென் லாங் 21-16, 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் சமீர் வர்மாவைத் தோற்கடித்தார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 16-21, 15-21 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் ஹான் செங் கை-சவ் ஹாவோ தாங் ஜோடியிடம் தோல்வி கண்டது.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT