Published : 16 Oct 2019 08:11 AM
Last Updated : 16 Oct 2019 08:11 AM

கால்பந்து தகுதிச்சுற்று: வங்கதேசத்துடன் இந்தியா டிரா

கோப்புப் படம்

கொல்கத்தா

உலகக் கோப்பை கால்பந்துத் தகுதிச் சுற்று போட்டியில் இந் தியா, வங்கதேச அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இதில் ஆசிய கண்டத்துக்கான தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இடம் பெற்றுள்ள 40 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் ‘இ’ பிரிவில் இடம் பிடித்து இந்தியாவும், வங்கதேச அணியும் நேற்று கொல்கத்தா வில் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இந்திய அணிக்காக ஆதில் கானும், வங்க தேச அணிக்காக சாத் உதினும் தலா ஒரு கோலடித்தனர். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x