Published : 08 Oct 2019 05:30 PM
Last Updated : 08 Oct 2019 05:30 PM

களத்திற்குத் திரும்பிய தோனி: டென்னிஸ் நட்சத்திரம் பயஸுடன் கால்பந்தாடினார்

மும்பை, ஐஏஎன்எஸ்

கிரிக்கெட்டிலிருந்து புரியாத புதிர் ஓய்வில் இருக்கும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் எம்.எஸ்.தோனி மும்பையில் லியாண்டர் பயஸுடன் சேர்ந்து காட்சிக் கால்பந்து போட்டி ஒன்றில் ஆடி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளார்.

சென்னையின் கால்பந்து கிளப்பின் உரிமையாளர்களுள் ஒருவரான தோனி அவ்வப்போது காட்சிக் கால்பந்து போட்டிகளில் ஆடுவது வழக்கம்.

தோனியிப் மனைவிக்குச் சொந்தமான ரிதி ஸ்போர்ட்ஸ் தனது முகநூல் பக்கத்தில் கால்பந்தாட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட வாசகத்தில், ‘கேப்டன் கூல்: தோனி இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸுடன் மும்பையில் காட்சிக் கால்பந்து போட்டியில்’ என்று குறிப்பிட்டுள்ளது.

தோனி இன்னும் சிலகாலம் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருப்பார் என்றும் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கும் அவர் திரும்பமாட்டார் என்றும் மே.இ.தீவுகளுக்கு எதிரான டிசம்பர் மாத டி20 தொடரில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x