Published : 04 Oct 2019 03:55 PM
Last Updated : 04 Oct 2019 03:55 PM

எதிரணி பேட்ஸ்மென்களுக்கு மட்டுமல்ல நம் அணி பேட்ஸ்மென்களுக்குமே பும்ரா பவுலிங் அச்சுறுத்தல்தான் - கே.எல்.ராகுல் புகழாரம்

ஜஸ்பிரித் பும்ரா எதிரணி பேட்ஸ்மென்களுக்கு மட்டுமல்ல வலையில் நம் அணி வீரர்களுக்கும் பெரிய பிரச்சினைதான் என்று கே.எல்.ராகுல், பும்ராவின் திறமையைப் பாராட்டினார்.

அவரைச் சீண்டிப்பார்க்கக் கூடாது காரணம் அயல்நாட்டில் எப்படி வீசுவாரோ அதே போல் சவாலாக வலைப்பயிற்சியிலும் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் வீசி பேட்ஸ்மென்களை சவாலுக்குட்படுத்துபவர் பும்ரா என்கிறார் கே.எல்.ராகுல்.

அவர் கூறியதாவது, “பும்ரா ஒரு அதியற்புத திறமை, இந்திய அணிக்கு அவர் வருவதற்கு முன்பே அவருடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இளையோர் மட்டத்தில் இருவரும் ஆடியிருக்கிறோம். அவர் அப்போதிருந்தே மிகவும் உறுதியானவர், கிரிக்கெட் மீது தீராப்பற்று கொண்டவர்.

அவரைச் சீண்டிப்பார்க்கக் கூடாது ஏனெனில் பந்தை உண்மையிலேயே பெரிய அளவில் வேகமாக வீசக்கூடியவர், ஒரே அணியில் ஆடினாலும் அவர் ஒரு போட்டியாளர் போலவேதான் இருப்பார், களத்துக்கு வெளியேயும் அவர் போட்டியாளர் போலத்தான் இருப்பார், ஒரே அணிக்கு, நாட்டுக்கு ஆடினாலும் அவரிடமிருந்து கருணையை எதிர்பார்க்க முடியாது.

எதிரணி பேட்ஸ்மென்களுக்கு மட்டுமல்ல வலைப்பயிற்சியிலும் நம் அணி பேட்ஸ்மென்களையே கடும் சிரமப்படுத்தும் பந்து வீச்சை செய்வார். அவரைப் போன்ற பவுலர்கள் மேன் மேலும் வளர்ந்து கொண்டேதான் இருப்பார்கள்.

நான் எதிர்கொண்ட பவுலர்களில் மிகுந்த சிரமம் கொடுத்தவரில் பாட் கமின்ஸை குறிப்பிடலாம், அதே போல் ரஷீத் கான், இவர் எனக்கு எதிராக சில எண்ணிக்கைகளைக் கொண்டுள்ளார், அதே போல் நேதன் லயன், இவரையும் நான் ஆடுவதற்கு சிரமப்பட்டுள்ளேன்” என்றார் ராகுல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x