Published : 28 Sep 2019 08:23 AM
Last Updated : 28 Sep 2019 08:23 AM

ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக அசாருதீன் தேர்வு

ஹைதராபாத் 

ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மொகமது அசாருதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தலைவர் பதவிக்கான தேர் தலில் அசாருதீனுக்கு 173 வாக்கு களும், அவரை எதிர்த்து போட்டி யிட்ட பிரகாஷ் சந்த் ஜெயினுக்கு 73 வாக்குகளும் கிடைத்தன. இந்த வெற்றியின் மூலம் கிரிக்கெட் நிர் வாகத்தில் காலடி எடுத்து வைக்க உள்ளார் 56 வயதான அசாருதீன்.

முன்னதாக கடந்த வாரம் ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் பதவி தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். 1990 காலக்கட்டத்தில் இவரது தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி உள்நாட்டில் நடைபெற்ற இங் கிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடர் களை வென்றிருந்தது.

இதன் பின்னர் 2000-ம் ஆண்டில் சூதாட்ட புகாரில் அசாருதீன் சிக் கினார். இதனால் பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. இருப் பினும் அசாருதீனுக்கு எதிரான விசாரணை முறைப்படி நடை பெறவில்லை எனக்கூறி ஆந்திரா உயர் நீதிமன்றம் உத்தர விட்டதுடன் அவர் மீதான வாழ் நாள் தடையை நீக்கியிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x