‘கொஞ்சம் மூளையைப் பயன்படுத்துப்பா’- நவ்தீப் சைனிக்கு காட்டமாக உணர்த்திய ரோஹித் சர்மா: வைரலாகும் வீடியோ

‘கொஞ்சம் மூளையைப் பயன்படுத்துப்பா’- நவ்தீப் சைனிக்கு காட்டமாக உணர்த்திய ரோஹித் சர்மா: வைரலாகும் வீடியோ
Updated on
1 min read

பெங்களூருவில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்று தொடரை சமன் செய்தது, அந்தப் போட்டியில் விராட் கோலி களத்தில் இல்லாத போது இன்சார்ஜாக இருந்த ரோஹித் சர்மாவின் செய்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அதாவது தென் ஆப்பிரிக்கா இந்தியாவின் குறைந்த இலக்கை விரட்டிய போது 12வது ஓவரை நவ்தீப் சைனி வீசினார், இதில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார் தென் ஆப்பிரிக்காவின் தெம்பா பவுமா.

அதாவது லெக் ஸ்டம்பில் புல்டாஸாக வீச பவுமா சுலபமாக அதைப் பவுண்டரிக்கு விரட்டினார். இதனையடுத்து காட்டமான ரோஹித் சர்மா, நவ்தீப் சைனியைப் பார்த்து கொஞ்சம் மூளையைப் பயன்படுத்தி வீசுப்பா என்று கூறுவது போல் கொஞ்சம் ஆக்ரோஷமாகவே செய்கை செய்தார், அப்போது விராட் கோலி மைதானத்தில் இல்லை.

இந்த வீடியோ வைரலாகியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in