Published : 25 Sep 2019 05:52 PM
Last Updated : 25 Sep 2019 05:52 PM

இன்னும் வலுவாக மீண்டும் திரும்புவேன் - பும்ரா சூளுரை

முதுகுக் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ஜஸ்பிரித் பும்ரா, தான் முன்னைவிடவும் வலுவாகத் திரும்புவேன் என்று சூளுரைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்த ட்வீட் வருமாறு:

“விளையாட்டில் காயங்கள் என்பது இயல்பானது. நான் விரைவில் குணமடைய வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றிகள். என் தலை நிமிர்ந்துள்ளது, பின்னடைவை விட மீண்டும் எழுச்சி பெற்று வலுவாக வருவேன்” என்று பும்ரா தெரிவித்துள்ளார.

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார், பும்ரா வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்குத் திரும்புவதும் கடினமே.

வழக்கமான ரேடியாலஜி டெஸ்ட்டில் பும்ராவுக்கு கீழ் முதுகுப் பகுதியில் ஸ்ட்ரெஸ் பிராக்சர் இருந்தது தெரிய வந்ததையடுத்து அவருக்கு மேலும் சுமை கூட்ட வேண்டாம் என்று நீக்கப்பட்டதாக பிசிசிஐ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x