Published : 21 Sep 2019 04:24 PM
Last Updated : 21 Sep 2019 04:24 PM

இந்திய மல்யுத்த வீரர் தீபக் பூனியா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றார்

நூர் சுல்தான், (கஜகஸ்தான்), பிடிஐ

கஜகஸ்தானில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் 86 கிலோ உடல் எடைப்பிரிவில் அரையிறுதியை எட்டியதன் மூலம் இந்திய வீரர் தீபக் பூனியா டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்ற 4வது இந்திய வீரர் ஆனார் பூனியா.

தனது முதல் மூத்தோர் உலக மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்ற பூனியா 7-6 என்று கொலம்பியாவின் கார்லோஸ் ஆர்ச்சுரோ மெண்டெஸ் என்பவரை வீழ்த்தினார்.

அடுத்த போட்டியில் சுவிஸ் வீரர் ஸ்டெபான் ரெய்க்மூத் என்பவருடன் மோடி தங்கப்பதக்கத்தைத் தீர்மானிக்கும் போட்டிக்கு முன்னேற பூனியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x