Published : 21 Sep 2019 03:50 PM
Last Updated : 21 Sep 2019 03:50 PM
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக, இந்தியா வருவதற்காகத் தான் மேற்கொண்ட விமானப் பயணம் மோசமான அனுபவத்தைத் தந்ததாக தென் ஆப்பிரிக்க வீரர் டூப்பிளசிஸ் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 20 - 20 போட்டிகளில் விளையாடி வருகின்றன. இதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் அக்டோபர் மாதத்திலிருந்து நடைபெறவுள்ளன. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் டூப்பிளசிஸ் 4 மணிநேரம் தாமதமாக வந்த பிரிட்டீஷ் விமானத்தால் இந்தியா வருவதற்கான இணைப்பு விமானத்தைத் தவறவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டூப்பிளசிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ 4 மணிநேர தாமதத்திற்குப் பிறகு துபாய் செல்வதற்கான விமானத்தில் இருக்கிறேன். தற்போது நான் இந்தியா செல்லும் விமானத்தைத் தவறவிடப் போகிறேன். அடுத்த விமானம் 10 மணிநேரத்துக்குப் பிறகுதான்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் டூப்பிளசிஸ் நேற்றிரவு இந்தியா செல்லும் விமானத்தைத் தவறவிட்டார்.
மேலும் 9 மணிநேரத்துக்குப் பிறகு, ''எனது கிரிக்கெட் பேக் இன்னும் இதுவரை வரவில்லை. இது எனது விமானப் பயணங்களில் மோசமான அனுபவம். எல்லாமே தவறாகச் சென்றுவிட்டது'' என்று டூப்ப்ளசிஸ் பதிவிட்டிருந்தார்.
டூப்பிளசிஸின் விமர்சனத்துக்கு பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கோரியுள்ளது.
Finally on a plane to Dubai after a 4 hour delay . Now I’m gonna miss my flight to India, next flight is only 10 hours later...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT