Published : 20 Sep 2019 04:51 PM
Last Updated : 20 Sep 2019 04:51 PM
ஆசியக் குத்துச் சண்டை சாம்பியனான அமித் பங்கல் (52கிலோ) உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவு இறுதிக்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஆனால் மனீஷ் கவுஷிக் (63கிலோ) அரையிறுதியில் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்கத்துடன் நிறைவுற்றார்.
இறுதிக்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்திய அமித் பங்கல், கஜகஸ்தான் வீரர் சாகென் பிபோசினோவை 3-2 என்று வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார்.
நாளை (சனிக்கிழமை) அமித் பங்கல் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷாகோபிதின் சோய்ரவ் என்பவரை இறுதியில் எதிர்கொள்கிறார்.
2017 ஆசிய பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 49 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலம் வென்றது முதல் அமித் பங்கல் பரவலாக கவன ஈர்ப்பு பெற்றார். இதே ஆண்டில் உலக குத்துச்சண்டையில் காலிறுதி வரை வந்து சாதனை புரிந்தார். மதிப்பு மிக்க பல்கேரியா ஸ்ட்ராண்டியா மெமோரியல் குத்துச் சண்டையில் தொடர்ச்சியாக தங்கம் வென்றார் அமித் பங்கல்.
அதன் பிறகு ஆசியப் போட்டிகளில் 2018-ல் சாம்பியன் ஆனார். ஒலிம்பிக் போட்டிகளிக்கான தகுதி நிலவரப்போட்டிகளில் 49 கிலோ எடைப்பிரிவு ரத்து செய்யப்பட்டதால் இந்த ஆண்டு 52 கிலோ எடைப்பிரிவில் இணைந்தார். இதில் ஏற்கெனவே ஆசிய போட்டிகளில் தங்கம் வென்றார்.
உலகக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்பில் ஒரே தொடரில் இந்தியா இதுவரை ஒரேயொரு வெண்கலம் மட்டுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT