Published : 19 Sep 2019 04:01 PM
Last Updated : 19 Sep 2019 04:01 PM

சீனா ஓபன் பாட்மிண்டன்: ‘த்ரில்’ போட்டியில் உலக சாம்பியன் பி.வி.சிந்து தோற்று வெளியேற்றம்

பி.வி.சிந்து. | கோப்புப் படம்.

உலக சாம்பியன் பிவி.சிந்து சீனா ஓபன் பாட்மிண்டனில் பரபரப்பான த்ரில் ஆட்டத்தில் கடைசியில் துரதிர்ஷ்டவசமாகத் தோல்வியடைந்து வெளியேறினார்.

தாய்லந்து வீராங்கணை போர்ன்பவி சோச்சுவாங் என்பவரிடம் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் பி.வி.சிந்து, 12-21, 21-13, 21-19 என்ற செட்கணக்கில் நெருக்கமான போட்டியில் தோல்வி தழுவி வெளியேறினார்.

சிந்து முதல் செட்டில் முதலில் 3-0 என்ற முன்னிலை பெற்றார், பிறகு அபாரமான ஸ்மாஷ், வாலிகளுடன் 7-1 என்று முன்னிலை பெற்றார், ஆனால் தாய்லாந்து வீராங்கனை அதன் பிறகு தன் ஸ்மாஷ் மற்றும் சர்வ்களிண்டால் 10-11 என்ரு நெருக்கினார். ஆனால் சிந்து மீண்டும் வெறிகொண்டு ஆட 8 புள்ளிகளை தொடர்ச்சியாக வென்றார் இதனையடுத்து 19-10 பிறகு 21-12 என்று ஆதிக்க வழியில் முதல் செட்டைக் கைப்பற்றினார்.

2வது செட்டில் தாய்லாந்து வீராங்கனை போர்ன்பவி பிரமாதமான ஆட்டத்தில் 5-1 என்ரு முன்னிலை வகித்தார், ஆனால் சிந்துவும் விடாப்பிடியாக ஆடி 7-9 என்று நெருங்கினார். ஆனால் தாய்லாந்து வீராங்கனை அதன் பிறகு திரும்பிப் பார்க்கவில்லை 6 புள்ளிகளைத் தொடர்ச்சியாக வென்று 15-7 என்றும் பிறகு 21-13 என்று 2வது செட்டைக் கைப்பற்ற ஆட்டம் பரபரப்பானது.

3வது செட் இருவரும் கடுமையாக ஆடிய செட்டாக அமைந்தது, இருவரும் 6-6 என்று சமனிலையில் இருந்தனர். பிறகு சிந்து ஆடிய சில ஷாட்கள் தாய்லாந்து வீராங்கனையை நிலைகுலைய வைக்க சிந்து 11-7 என்று முன்னிலை வகித்து வெற்றிக்கு அச்சாரம் இட்ட நிலையில் போர்ன்பவி மீதான தன் பிடியை சிந்து தளர்த்த அவர் 7 புள்ளிகளிலிருந்து 8 புள்ளிகளை வெல்ல, சிந்துவும்8 புள்ளிகளை மட்டும் பெற சிந்து சார்பாக 3வது செட் 19-15 என்று வெல்லும் நிலையில் இருந்தது.

இந்த நிலையிலிருந்து போர்ன்பவியின் ஆட்டமும் சிந்துவின் அன்ஃபோர்ஸ்டு எரர்களும் சேர்ந்து தாய்லாந்து வீராங்கனை போர்ன்பவி 6 புள்ளிகளை தொடர்ச்சியாகப் பெற்று போட்டியையும் வெல்ல வைத்ததோடு சிந்துவை வெளியேற்றி விட்டது.

போர்ன்பவியின் ஸ்மாஷ்களும் கிராஸ்கோர்ட் ரிடர்ன்களையும் சிந்து சமாளிக்கத் தவறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x