Published : 18 Sep 2019 11:53 AM
Last Updated : 18 Sep 2019 11:53 AM
நூர்-சுல்தான்
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைகளான வினேஷ் போகத், சீமா பிஸ்லா ஆகியோர் பதக்க சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கின்றனர்.
கஜகஸ்தானியின் நூர்-சுல்தான் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான ஃப்ரீஸ்டைலில் 53 கிலோ எடைப் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் வினேஷ் போகத், நடப்பு சாம்பியனான ஜப்பானின் மயூ முகைதாவை எதிர்த்து விளையாடினார். இதில் வினேஷ் போகத் 0-7 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
மயூ முகைதா இறுதி சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் வெண்கலப் பதக்கத்துக்கான ரெப்பேஜ் சுற்றில் விளையாட வினேஷ் போகத் தகுதி பெற்றார். இந்த சுற்றின் முதல் ஆட்டத்தில் உக்ரைனின் யூலியா கால்வாட்ஸியை எதிர்த்து விளையாட உள்ளார் வினேஷ் போகத். இதில் வெற்றி பெறும் பட்சத்தில் 2-வது சுற்றில் அமெரிக்காவின் சாரா ஹில்டெபிராண்டுடன் மோது வார். இதிலும் வினேஷ் போகத் வெற்றி பெற்றால் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ரஷ் யாவின் மரியா ப்ரிவோலராகியை சந்திப்பார். வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றும் பட்சத்தில் வினேஷ் போகத், அடுத்த ஆண்டு டோக்கி யோவில் நடைபெற உள்ள ஒலிம் பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்.
50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சீமா பிஸ்லா கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் 2-9 என்ற கணக்கில் 3 முறை ஒலிம் பிக்கில் பதக்கம் வென்ற அஜர் பைஜானின் மரியா ஸ்டாட்னிக்கிடம் தோல்வியடைந்தார். மரியா ஸ்டாட்னிக் இறுதி சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் ரெப்பேஜ் சுற்றில் விளையாட சீமா பிஸ்லா தகுதி பெற்றார். இந்த சுற்றில் சீமா பிஸ்லா, நைஜீரியாவின் மெர்சி ஜெனிஸிஸுடன் மோதுகிறார்.
இதில் வெற்றி பெறும் பட்சத்தில் ரஷ்யாவின் கேத்ரினா போலேஷ்சுக்குடன் மோத வேண்டும். இந்த ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்தினால் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீனா வின் சன் யானனுடன் பலப்பரீட்சை நடத்துவார் சீமா பிஸ்லா. வெண்கலப் பதக்கம் சீமா பிஸ்லா வசமாகும் பட்சத்தில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்.
72 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் கோமல் 1-4 என்ற கணக்கில் துருக்கியின் பெஸ்டி அல்டக்கிடமும், 55 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லலிதா 3-10 என்ற கணக்கில் மங்கோலியாவின் போலோர்டுயாவிடமும் தோல்வி யடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT