Published : 24 Aug 2019 08:28 PM
Last Updated : 24 Aug 2019 08:28 PM

‘இந்த ஒரு விஷயத்தில்தான் இன்னும் அவர் தன்னை சரிப்படுத்திக் கொள்ள வேண்டும்’ - கோலியிடம் கங்குலியின் அதிருப்தி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பிளாட் சிட்னி பிட்சில் 5 விக்கெட் எடுத்த குல்தீப் யாதவும் இல்லை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நல்ல சாதனைகள் புரிந்த அஸ்வினும் இல்லை என்பது கங்குலிக்கும் பிடித்தமானதாக இல்லை.

முன்னதாக கவாஸ்கர் கடும் அதிர்ச்சி தெரிவித்திருந்தார். இப்போது கங்குலியும் கருத்து தெரிவித்துள்ளார்.

“இந்த ஒரு விஷயத்தில்தான் கோலி இன்னும் கொஞ்சம் சீரான முறையில் இயங்க வேண்டியத் தேவையுள்ளது. வீரர்களைத் தேர்வு செய்தால் அவர்களுக்குக் கொஞ்சம் வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஷ்ரேயஸ் அய்யர் சிறந்த உதாரணம், மற்றவீரர்களுக்கு இதையே கோலி கடைபிடிக்க வேண்டும், நிச்சயம் கடைபிடிப்பார்.

குல்தீப் யாதவ் உட்கார வைக்கப்பட்டதும் எனக்கு ஆச்சரியமாக உள்ளது, காரணம் கடைசியாக சிட்னியில் ஆடிய டெஸ்ட்டின் போது பிளாட் பிட்சில் அவர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் ஜடேஜாவும் நல்ல பார்மில் இருக்கிறார், ஆனால் நடப்பு டெஸ்ட் போட்டியில் சீரற்ற பிட்சில் ஜடேஜா எப்படி 2வது இன்னிங்சில் வீசப்போகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.

அஸ்வின் சாதனைகள் அபரிமிதமானது அவரை உட்கார வைத்திருக்கக் கூடாது. ஆனால் இத்தகைய தேர்வுகள் சாதக பலன்களை அளிக்கிறதா என்பதை முதல் டெஸ்ட் போட்டி முடிவில் பார்ப்போம்.

ஆனால் இந்திய கிரிக்கெட்டின் போட்டி என்பது இதுதான்” என்றார் கங்குலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x