Published : 24 Aug 2019 09:40 AM
Last Updated : 24 Aug 2019 09:40 AM
கொழும்பு
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.
கொழும்பு நகரில் உள்ள பி சாரா ஓவல் மைதானத்தில் நடை பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. 36.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்தது. லகிரு திரிமானே 2, குசால் மெண்டிஸ் 32 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் திமுத் கருணாரத்னே 49 ரன்களும், மேத்யூஸ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந் தனர். இந்த ஜோடி நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளை யாடியது. குளிர்ந்த வானிலையை சரியாக பயன்படுத்திக் கொண்ட டிரென்ட் போல்ட், டிம் சவுதி வேகக் கூட்டணி கடும் நெருக்கடி கொடுத் தது. 42-வது ஓவரை வீசிய டிரென்ட் போல்ட் இரு விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
அவரது பந்தில் ஏஞ்சலோ மேத்யூஸ் 2, குசால் பெரேரா ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்ட மிழந்தனர். 8 ரன்கள் இடைவெளி யில் இந்த இரு விக்கெட்களும் வீழ்த்தப்பட்டதால் 93 ரன்களுக்கு 4 விக்கெட்கள் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டது இலங்கை அணி. மிகநிதானமாக விளையாடி வந்த கருணாரத்னே 165 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்த நிலையில் டிம் சவுதி பந் தில் விக்கெட் கீப்பர் ஜேபி வாட் லிங்கிடம் பிடிகொடுத்து வெளி யேறினார்.
இதைத் தொடர்ந்து களமிறங் கிய நிரோஷன் திக்வெலாவை ரன் ஏதும் எடுக்காத நிலையில் பெவிலியனுக்கு திருப்பினார் டிம் சவுதி. இதனால் இலங்கை அணி கடும் அழுத்தத்தை சந்தித்தது. மதிய உணவு இடைவேளையில் இலங்கை அணி 66 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 144 ரன் கள் எடுத்திருந்தது. தனஞ்ஜெயா டி சில்வா 62 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்களும், திலுருவன் பெரேரா 5 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந் தனர்.
மதிய உணவு இடைவேளையின் போது மழை குறுக்கிட்டது. தேநீர் இடைவேளைக்குப் பின்னரும் இடைவிடாது மழை பெய்ததால் 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இரு நாட்களும் ஒட்டுமொத்தமாக 66 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT