Published : 20 Aug 2019 08:47 AM
Last Updated : 20 Aug 2019 08:47 AM
புதுடெல்லி: லக்னோவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் தேசிய மல்யுத்த பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற 45 வீராங்கனைகளில் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக் ஷி மாலிக், மற்றும் சீமா பிஸ்லா, கிரண் உள்ளிட்ட 25 பேர் தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் அனுமதியின்றி வெளியே சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து இவர்கள் அனைவரையும் பயிற்சி முகாமில் இருந்து வெளியேற்றி உத்தரவிட்டுள்ளது இந்திய மல்யுத்த கூட்டமைப்பு.இதில் சாக் ஷி மாலிக், சீமா பிஸ்லா, கிரண் ஆகியோருக்கு மட்டும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே சாக் ஷி மாலிக், சீமா பிஸ்லா, கிரண் ஆகிய 3 பேரும் தாங்கள் ரக் ஷா பந்தன் விழாவில் கலந்து கொள்வதற்காக வீட்டுக்கு சென்றிருந்ததாகவும் முன் அனுமதி பெறாமல் சென்றது தவறுதான் என மன்னிப்பு கடிதம் வழங்கியதால் அவர்கள் 3 பேரும் தேசிய பயிற்சி முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் துணை செயலாளர் வினோத் தோமர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT