Published : 31 Jul 2019 07:28 PM
Last Updated : 31 Jul 2019 07:28 PM
கேல் ரத்னா விருதுக்குத் தேவையான ஆவணங்களை ஹர்பஜன் சிங் குறித்த காலத்துக்கு முன்னரே சமர்ப்பித்து விட்ட நிலையிலும் பஞ்சாப் மாநில விளையாட்டுத் துறை தாமதமாக மத்திய அரசுக்கு ஆவணங்களை அனுப்பியதால் ஹர்பஜன் பெயர் கேல் ரத்னா விருதுக்கு நிராகரிக்கப்பட்டது.
தாமதமாக வந்ததால் அவர் பெயர் நீக்கப்பட்டதாக மத்திய இளையோர் மற்றும் விளையாட்டு விவகார அமைச்சகம் நிராகரித்ததாகத் தெரிவித்ததால் பஞ்சாப் விளையாட்டுத் துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் விளையாட்டுத் துறை அமைச்சர் ராணா குர்மித் சிங் சோதியிடம் ஹர்பஜன் இது தொடர்பாக முறையிட்டதையடுத்து அவர் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டது. விளையாட்டு இயக்குநர் தாமதத்திற்கான காரணத்தை விசாரணை செய்யவுள்ளார்.
ஹர்பஜன் சிங் மார்ச் 20ம் தேதியே கேல் ரத்னா விருது பரிந்துரைகளுக்குத் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT