Published : 16 Jul 2019 02:17 PM
Last Updated : 16 Jul 2019 02:17 PM

இறுதிப் போட்டியில் யாரும் தோற்கவில்லை: வில்லியம்ஸன்

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யாரும் தோற்கவில்லை என்று நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து - இங்கிலாந்து இடையே ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகக்கோப்பை  இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்தது.

முதலில் நடைபெற்ற பிரதான போட்டியில்  நியூஸிலாந்து அடித்த 241 ரன்னை இங்கிலாந்து எடுத்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது . இதனைத் தொடர்ந்து  நடத்தப்பட்ட சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது. இதனால், ஒரு இன்னிங்ஸில் அதிகமான பவுண்டரியை எந்த அணி அடித்தது என்ற அடிப்படையில் கணக்கிடும்போது இங்கிலாந்து அணி அதிகமாக எடுத்திருந்ததால், அந்த அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.  இங்கிலாந்து 26 பவுண்டரிகளும், நியூஸிலாந்து 17 பவுண்டரிகளும் அடித்திருந்தன.

எனினும் ஐசிசியின் முடிவு ரசிகர்கள் உட்பட  கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் ஏமாற்றத்தை அளித்தது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும்  ஐசிசியின் விதியை விமர்சித்தனர்.

இந்த நிலையில் இறுதிப் போட்டி முடிவு குறித்து  பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் கூறும்போது, “இறுதிப் போட்டியில் யாரும் தோற்கவில்லை. ஆனால் அங்கு கீரிடம் சூடப்பட்ட வெற்றியாளர் இருந்தார். அவ்வளவுதான். உலகக்கோப்பையின் முடிவுகள் உங்கள் தலையில் ஓடிக் கொண்டிருப்பது சற்று கடினம்தான். ஆனால், இதனைப் பகுத்தறிவுடன் ஏற்றுக்கொள்ள சிறிது காலம் தேவைப்படும். நாங்கள் நாக் அவுட்போட்டிகளில் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு எங்களைத் தயார்படுத்தி விளையாடினோம்.

மேலும் ஐசிசியின் விதிகள் குறித்து வில்லியம்ஸன் கூறும்போது, “விதிகள் விதிகள்தான்...  இங்கிலாந்து அணி இந்த உலகக்கோப்பை தொடர் சிறப்பாக இருந்தது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x