Last Updated : 23 Jul, 2015 09:42 AM

 

Published : 23 Jul 2015 09:42 AM
Last Updated : 23 Jul 2015 09:42 AM

சானியா, பயஸுக்கு மக்களவையில் பாராட்டு

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் லியாண்டர் பயஸ், சானியா மிர்சா, சுமித் நாகல் மற்றும் ஜூனியர் உலக கோல்ஃப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சுபம் ஜக்லான் ஆகியோருக்கு மக்களவையில் நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக நேற்று மக்களவையில் பேசிய மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், “கிராண்ட்ஸ்லாம் போட்டியின் (விம்பிள்டன்) மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சானியா மிர்சாவுக்கு மக்களவையின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதேபோல் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற லியாண்டர் பயஸ், விம் பிள்டன் ஜூனியர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற சுமித் நாகல், ஜுனியர் உலக கோல்ஃப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற 10 வயது சுபம் ஜக்லான் ஆகியோரையும் இந்த மக்களவை பாராட்டுகிறது.

இவர்களின் சாதனைகள் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்திருப்பதோடு, வளர்ந்து வரும் வீரர், வீராங்கனைகளுக்கு உந்துதலாக அமைந்துள்ளது. சானியா மிர்சா, பயஸ், சுமித் நாகல், சுபம் ஜக்லான் ஆகியோருக்கு வாழ்த்துகள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x