Published : 14 Jul 2015 09:46 AM
Last Updated : 14 Jul 2015 09:46 AM

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வங்கதேசம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது வங்கதேசம்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் டூபிளெஸ்ஸி 41 ரன்களும், பெஹார்டியன் 36 ரன்களும் எடுத்தனர்.

எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அந்த அணி 46 ஓவர்களில் 162 ரன்களுக்கு சுருண்டது. வங்கதேசம் தரப்பில் முஸ்தாபிஜுர் ரஹ்மான், நாசிர் ஹுசைன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

பின்னர் பேட் செய்த வங்கதேச அணியில் தமிம் இக்பால் 5 ரன்களி லும், பின்னர் வந்த லிட்டன் தாஸ் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த சவும்ய சர்க்காரும், மகமதுல்லாவும் அசத்தலாக ஆட வங்கதேசத்தின் வெற்றி எளிதானது.

மகமதுல்லா 64 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, 27.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது வங்கதேசம். சவும்ய சர்க்கார் 79 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா 2 விக்கெட்டுகளையும், அபாட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

சவும்ய சர்க்கார் ஆட்டநாயக னாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இவ்விரு அணிகளுக்கு இடை யிலான கடைசி ஒருநாள் ஆட்டம் சிட்டகாங்கில் நாளை நடக்கிறது. இந்த ஆட்டம்தான் தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் ஆட்டம் என்பதால் அது வங்கதேச ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x