Published : 14 Jul 2015 09:45 AM
Last Updated : 14 Jul 2015 09:45 AM

மகளிர் டி20 கிரிக்கெட்: தொடரை இழந்தது இந்தியா

நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்திய அணி. ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் தோல்வி கண்டிருந்த இந்திய அணி, 2-வது ஆட்டத்திலும் தோல்வி கண்டதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இழந்துள்ளது.

பெங்களூரில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் குவித் தது. இந்திய அணியில் அதிகபட்ச மாக வனிதா 41, ஹர்மான்ப்ரீத் கவுர் 30, வேதா கிருஷ்ணமூர்த்தி 29 ரன்கள் எடுத்தனர். நியூஸிலாந்து தரப்பில் டிவைன் 2 விக்கெட் எடுத்தார்.

பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் சுஸீ பேட்ஸ் ரன் ஏதுமின் றியும், டிவைன் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

எனினும் தொடக்க வீராங்கனை பிரைஸ் அசத்தலாக ஆடி 34 பந்துகளில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, 17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது நியூஸிலாந்து. இந்திய தரப்பில் ஜுலான் கோஸ் வாமி 2 விக்கெட் வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x