Last Updated : 19 Jun, 2015 03:06 PM

 

Published : 19 Jun 2015 03:06 PM
Last Updated : 19 Jun 2015 03:06 PM

பிரேசில் வீர்ர் நெய்மர் மீது ஒழுங்கு நடவடிக்கை: ஒரு போட்டியில் விளையாடத் தடை

கொலம்பியாவுக்கு எதிரான கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில் 0-1 என்று தோற்றது. இந்தப் போட்டியில் நெய்மருக்கு மோசமான நடத்தைக்காக சிகப்பு அட்டை காண்பிக்கப் பட்டது.

இதனையடுத்து தென் அமெரிக கால்பந்து கூட்டமைப்பு நெய்மர் விளையாட ஒரு போட்டிக்கு தடை விதித்தது, ஆனால் மேலும் சில போட்டிகளிலும் அவர் தடை செய்யப்படலாம் என்று பிரேசில் கால்பந்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்போதைக்கு ஒரு போட்டி தடை விதிக்கப்பட்ட நெய்மர் மேலும் சில போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படுவது பற்றி வரும் வெள்ளிக்கிழமையன்று முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

பெரு அணிக்கு எதிராக ஒரு மஞ்சள் அட்டையும், நேற்று கொலம்பியா அணிக்கு எதிராக மேலும் ஒரு மஞ்சள் அட்டையும் வாங்கிய நெய்மர், கொலம்பிய தடுப்பாட்ட வீரர் ஜெய்சன் முரில்லோவிடம் மோதல் போக்கைக் கடைபிடித்தார். இதனையடுத்து சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

எனினும் பிரேசில் கால்பந்து கழகம் தன் தரப்பு வாதங்களை எடுத்துவைக்க உள்ளதால் இதன் பிறகே இறுதி முடிவு எட்டப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x