ஐபிஎல்: வார்னர் புயலில் வீழ்ந்தது சென்னை

ஐபிஎல்: வார்னர் புயலில் வீழ்ந்தது சென்னை
Updated on
1 min read

ரசூல் வீசிய 6-வது ஓவரில் தொடர்ந்து 3 சிக்ஸர்களை விளாசிய ஸ்மித், கரன் சர்மா வீசிய அடுத்த ஓவரிலும் ஒரு சிக்ஸ அடித்து அரை சதத்தை நெருங்கினார். அந்த ஓவரின் 5-வது பந்தை சரியாக கணிக்காமல் ஆடியதால் லெக் பிஃபோர் முறையில் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரை சதத்தை ஸ்மித் தவற விட்டார்.

அடுத்து ஹஸ்ஸி களமிறங்க, மறுமுனையில் ஆடிய ரெய்னா 4 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மேற்கொண்டு விக்கெட் இழப்பின்றி சென்னை அணி, ஹஸ்ஸி மற்றும் தோனியின் துணையுடன் சிறப்பாக ஆடியது. கடைசி ஓவர் வரை களத்தில் இருந்த தோனி - டேவிட் ஹஸ்ஸி ஜோடி, அணியை சிறப்பான ஸ்கோரை நோக்கி வழிநடத்தியது. 77 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் களத்தில் இணைந்த இருவரும் ஹைதராபாதின் பந்துவீச்சை பொறுமையாக கணித்து ஆடினர். 68 பந்துகளில் 108 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்தனர்.

தோனி 39 பந்துகளிலும், ஹஸ்ஸி 33 பந்துகளிலும் அரை சதத்தைக் கடந்தனர். முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன் வீசிய 20-வது ஓவரில், சென்னையின் கேப்டன் தோனி 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களோடு 24 ரன்களைக் எடுத்தார். கடைசி 5 ஒவர்களில் மட்டும் 68 ரன்களை இந்த இணை அதிரடியாக சேர்த்தது. 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 185 ரன்களை சென்னை அணி குவித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in