Published : 09 Jun 2015 09:44 AM
Last Updated : 09 Jun 2015 09:44 AM
7-வது சர்வதேச ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அனந்த்ஜீத் நருகா இரு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
ஃபின்லாந்தின் ஆரிமேட்டிலா நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் தனிநபர் பிரிவில் முறையே 110 மற்றும் 12 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கம் வென்றார் அனந்த்ஜீத். பின்னர் நடைபெற்ற ஸ்கீட் அணி பிரிவு போட்டியில் சகநாட்டவர்களான அங்கத்வீர் பஜ்வா, அர்ஜூன் மேன் ஆகியோருடன் இணைந்து களமிறங்கிய அனந்த்ஜீத் அதிலும் தங்கம் வென்றார்.
ஸ்கீட் ஜூனியர் ஆடவர் தனிநபர் பிரிவு போட்டியில் அங்கத்வீர் பஜ்வா முறையே 119 மற்றும் 13 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலம் வென்றார். இதேபோல் ஆடவர் ஜூனியர் டிராப் போட்டியில் இந்தியாவின் ஆகாஷ் சரண், கிஸ்மத் சோப்ரா, லக்ஷய் ஆகியோர் அடங்கிய அணி முறையே 107,101 மற்றும் 99 புள்ளிகளைப் பெற்றது. இதன்மூலம் 2-வது இடத்தைப் பிடித்த இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த இந்திய துப்பாக்கி சுடுதல் சங்க தலைவர் ரனிந்தர் சிங், “ஜூனியர் வீரர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளனர். தகுதி வாய்ந்த அடுத்த தலைமுறை சீனியர் வீரர்களாக வருவதற்கு இவர்கள் அனைவரும் தங்களை தயார்படுத்தியுள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT