Published : 02 May 2015 09:40 AM
Last Updated : 02 May 2015 09:40 AM

மாநில செஸ்: குகேஷ், ஹர்ஷினி சாம்பியன்

சென்னை பூந்தமல்லியில் உள்ள பிரதியுஷா தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக் கல்லூரி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான செஸ் போட்டியில் குகேஷ், ஹர்ஷினி உள்ளிட்டோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

கல்லூரி வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டி ஆடவர், மகளிர் என இரு பிரிவினருக்கும் தலா 6 பிரிவுகளில் நடத்தப்பட்டது. 9 வயது ஆடவர் பிரிவில் குகேஷும், மகளிர் பிரிவில் ஹர்ஷினியும், 11 வயது ஆடவர் பிரிவில் சர்வேஷ் குமாரும், மகளிர் பிரிவில் கீர்த்தனாவும், 13 வயது ஆடவர் பிரிவில் அர்ஜுனும், மகளிர் பிரிவில் லட்சுமியும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

15 வயது ஆடவர் பிரிவில் ஹேமந்த் ராமும், மகளிர் பிரிவில் ஸ்நேகாவும், 17 வயது ஆடவர் பிரிவில் சாய் விஷ்வேஸும், மகளிர் பிரிவில் தாமரை செல்வியும், 19 வயது ஆடவர் பிரிவில் யோகித்தும், மகளிர் பிரிவில் பால கண்ணம்மாவும் சாம்பியன் பட்டம் வென்றனர். இவர்கள் அனைவருக்கும் கையடக்கக் கணினி பரிசாக வழங்கப்பட்டன. இதுதவிர பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு 120 கோப்பைகள் வழங்கப் பட்டன.

பரிசளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர் பியூலா தேவமலர், அகில இந்திய செஸ் சம்மேளன செயலாளர் ஹரிஹரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x