Published : 15 May 2015 09:56 AM
Last Updated : 15 May 2015 09:56 AM
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியி லிருந்து இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் விலகியுள்ளார். கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
சன்ரைஸர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த பீட்டர்சன், இங்கிலாந்து அணியில் இடம்பிடிப்பதற்காக ஐபிஎல் போட்டியில் விளையா டாமல் கவுன்டி போட்டியில் விளை யாடி வந்தார்.
அந்தப் போட்டியில் அவர் முச்சதம் அடித்தபோதும், அவருக்கு இங்கிலாந்து அணியில் இடமில்லை என அறிவிக்கப்பட் டதைத் தொடர்ந்து, ஐபிஎல் போட்டி யில் களமிறங்க முடிவு செய்திருந் தார்.
ஆனால் இப்போது அதிலி ருந்தும் விலகியுள்ளார். இந்த முறை காயத்தின் வடிவில் அவருக்கு சோதனை வந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT