Published : 08 Apr 2015 09:52 AM
Last Updated : 08 Apr 2015 09:52 AM

ஐபிஎல்: எல்லா புகழும் ரெய்னாவுக்கே!

ஐபிஎல் போட்டியின் தொடக்கம் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் புதுமாப்பிள்ளை சுரேஷ் ரெய்னா, இந்த முறை தனது மனைவியின் முன்னிலையில் கலக்கவுள்ளார்.

சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு அடுத்தபடியாக அதிக முக்கியத்துவம் பெற்றவரான ரெய்னா, அந்த அணி இதுவரை விளையாடிய 115 ஆட்டங்களிலும் விளையாடிய ஒரே நபர் ஆவார்.

ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 3325 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கும் ரெய்னா, அதிகமுறை அரைசதம் (23), அதிக கேட்ச் (64) பிடித்த வீரர் போன்ற சாதனைகளையும் தன்வசம் வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x