Published : 18 Mar 2015 09:48 AM
Last Updated : 18 Mar 2015 09:48 AM

சாய்னா, காஷ்யப்புக்கு தலா ரூ.5 லட்சம்

உலகின் 2-ம் நிலை பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நெவால், காமன்வெல்த் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற காஷ்யப் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங் கப்படும் என இந்திய பாட்மிண்டன் சங்கம் அறிவித்துள்ளது.

சாய்னா, காஷ்யப் ஆகிய இருவரும் ஜனவரியில் நடந்த சயீத் மோதி கிராண்ட்ப்ரீ கோல்டு போட்டியில் சாம்பியன் ஆயினர். சமீபத்தில் நடந்த ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் சாய்னா இறுதிச்சுற்று வரை முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

இதேபோல் ஸ்விஸ் ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீகாந்துக்கும் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x