விழுப்புரம் பொற்கொல்லரின் கைவண்ணத்தில் உருவான தங்கக் கோப்பை

விழுப்புரம் பொற்கொல்லரின் கைவண்ணத்தில் உருவான தங்கக் கோப்பை
Updated on
1 min read

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர் தனது கைவண்ணத்தில் 70 மில்லி கிராம் தங்கத்தில் உலக கோப்பையை உருவாக்கியுள்ளார்.

மேல்பகுதியில் கிரிக்கெட் பந்து, சுற்றிலும் 3 தாங்கு கம்பிகள், கீழ்பகுதியில் தட்டு என உலக கோப்பை வடிவத்திலேயே அது காணப்படுகிறது.

இது தொடர்பாக ராஜகோபால் கூறும்போது, “உலக கோப்பையை தங்கத்தில் செய்து முடிக்க 2 மணி நேரம் ஆனது. உலக கோப்பை போட்டியில் இந்தியா சாம்பியன் ஆனால், அவர்களுக்கு இந்த கோப்பையை பரிசாக வழங்குவேன். இந்த கோப்பையை செய்வதற்கு எனக்கு ரூ.200 மதிப்பிலான தங்கம் மட்டுமே தேவைப்பட்டது” என்றார்.

ராஜகோபால்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in