ஐபிஎல் கிரிக்கெட்: கோலி நெகிழ்ச்சி

ஐபிஎல் கிரிக்கெட்: கோலி நெகிழ்ச்சி
Updated on
1 min read

வீரர்கள் நெருக்கடியின்றியும், ரசித்து விளையாடவும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி உதவும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

7-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்ட போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 16-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அது தொடர்பாக கோலி மேலும் கூறியிருப்பதாவது:

கிரிக்கெட்டை எப்போதும் ரசித்து விளையாடுவோம். அதுவும் ஐபிஎல் தொடரில் கூடுதல் மகிழ்ச்சியுடன் ஆடுவோம். சர்வதேச போட்டிகளில் இருப்பதுபோன்று எவ்வித நெருக்கடியும் இருக்காது.

இந்த சீசனில் ஒருசில படிகள் முன்னேறிச்செல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. திறமையான வீரர்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு முறையும் கோப்பையை வெல்ல முயற்சி செய்கிறோம். இந்த முறை அனுபவம், இளமை என சரியான அளவில் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதைப் பயன்படுத்தி கோப்பையை வெல்ல முயற்சிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in