Published : 18 Mar 2015 09:45 AM
Last Updated : 18 Mar 2015 09:45 AM

ரெய்னாவுக்கு ஏப்ரல் 3-ல் திருமணம்

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வுக்கும், பிரியங்கா சவுத்ரி என்பவருக்கும் வரும் ஏப்ரல் 3-ம் தேதி லக்னோவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரியங்கா தற்போது நெதர்லாந்தில் பணியாற்றி வருகிறார். ரெய்னாவின் தந்தையும், பிரியங்காவின் தந்தையும் நீண்ட நாள் நண்பர்கள். அவர்கள் இருவரும் பீரங்கி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.

திருமணத்தைத் தொடர்ந்து பிரமாண்ட முறையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும், அதை டெல்லியில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், பிசிசிஐ மூத்த நிர்வாகிகள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x