Published : 11 Mar 2015 09:40 AM
Last Updated : 11 Mar 2015 09:40 AM

ரஞ்சி கிரிக்கெட்: சாம்பியனாகிறது கர்நாடகம்

மும்பையில் நடைபெற்று வரும் ரஞ்சி கிரிக்கெட் இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த தமிழக அணி 134 ரன்களுக்கு சுருண்டது.

பின்னர் ஆடிய கர்நாடக அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய அந்த அணி, ஆட்டநேர முடிவில் 189 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 618 ரன்கள் குவித்துள்ளது.

அந்த அணியின் கருண் நாயர் 310 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். முன்னதாக ராகுல் 188 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

தற்போதைய நிலையில் அந்த அணி 484 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 2 நாள் ஆட்டம் மட்டுமே மீதமுள்ள நிலையில் கர்நாடகம் சாம்பியன் ஆகும் வாய்ப்பை நெருங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x