Last Updated : 12 Mar, 2015 02:56 PM

 

Published : 12 Mar 2015 02:56 PM
Last Updated : 12 Mar 2015 02:56 PM

மோடியின் அடுத்த ரேடியோ உரை: விவசாயிகள் கவனத்துக்கு...

பிரதமர் மோடி, வரும் 22-ம் தேதியன்று ஒலிபரப்பப்படும் ரேடியோ நிகழ்ச்சியில் விவசாயிகள் நலன் தொடர்பாக பேசவுள்ளார்.

மாதந்தோறும் ‘மனதில் உள்ளதைப் பேசுகிறேன்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலி நிலையம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.

அதன்படி, மார்ச் 22-ல் பிரதமர் மோடி விவசாயிகள் நலன் தொடர்பாக பேசவுள்ளார்.

இது தொடர்பாக அவரே தனது ட்விட்டரில், "மார்ச் 22-ம் தேதி விவசாய சமூகத்தைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுடன் உரையாட இருக்கிறேன். உங்கள் யோசனைகளை வரவேற்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x